தந்திரக் கட்சியின் வரலாற்றில் முதற்டவையாக ஒரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை சிறப்புக்குரியது என ஆசாத் சாலி குறிப்பிட்டார்.
அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் நான் நுஆ கட்சியின் செயலாளர் என்றவகையிலும், மூவின மக்களின் ஆதரவைப் பெற்றவன் என்ற வகையிலும் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறேன்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் கலப்புமுறை என்பதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விட்டு மேயர் பதவியை என்னால் ஜெயிக்கமுடியும். ரோசி சேனநாயக்காவுக்கு கிறிஸ்த்தவ வாக்குகள் விழும். எனினும் எனக்கு மூவின மக்களின் வாக்குகளும் கிடைக்கும். அதனால் என்னால் கொழும்பு மேயர் வேட்பாளராக ஜெயிக்க முடியும் என்றார்.
0 Comments