தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதை பார்த்த மாணவன் தனது சட்டையை கழற்றி ரெயிலை நிறுத்தினார் இதனால் நூற்றுகணக்கான பயணிகள் உயிர் பிழைத்தனர்.
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் மங்கல் பூரை சேர்ந்த மாணவன் பீம் யாதவ்( வயது 12) அங்குள்ள அரசு நிலைபள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். யாதவ் நேற்று தனது பழதோட்டத்திற்கு சென்றான் அப்போது கோரக்பூர்-நர்கட்டியாகாஞ்ச் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றான். அப்போது ரெயில்வே தண்டவாளம் உடைந்து இருப்பதை பார்த்து உள்ளான்.
அதே நேரம் அதே தண்டவாளத்தில் பயணிகள் ரெயில் ஒன்று வேகமாக வந்து உள்ளது. சிறுவன் ரெயிலை நோக்கி கையை காட்டி உள்ளான், பின்னர் சிறுவன் தான் அணிந்து இருந்த சிகப்பு சட்டையை காட்டி உள்ளான். ஆனால் ரெயில் டிரைவருக்கு முதலில் என்னவென்று புரியவில்லை. பின்னர் ரயிலின் ஓட்டுனர் அவசரகால பிரேக்கை இழுத்து ரெயிலை நிறுத்தி உள்ளார். பின்னர் டிரைவர் இரங்கி வந்து பார்த்த போது தான் தண்டவாளம் உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
பின்னர் அந்த சிறுவனை அவர் பாராடினார் உடனடியாக இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறுவனின் அறிவிப்பூர்வமான நடவடிக்கையில் ஏற்பட இருந்த மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இதனால் நூற்றுகணக்கான பயணிகள் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.
இது குறித்து சிறுவன் கூறும் போது இந்த சமுதாயமும் என்னைப் பற்றி பேசும் வகையில் ஏதாவது சாதனை செய்ய விரும்பினேன். இப்போது நான் பயணிகள் உயிர்களை காப்பாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறேன், "
பீகார் அதிகாரிகள் சிறுவனின் செயலை பாராட்டி அவனுக்கு விருது மற்றும் பரிசு வழங்க முடிவு செய்து உள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஹரேந்திர ஜா கூறியதாவது:-
பயணிகள் உயிர்களை காப்பாற்றிய மாணவனின் துணிச்சலான செயலுக்காக அவருக்கு வெகுமதி அளிக்கப் போகிறோம். வெகுமதி பணம் அல்லது மேற்கோள் வடிவில் இருக்கலாம். ஆனால் இன்னும் அதனை நாங்கள் தீர்மானிக்கவில்லை. ஆனால் நிச்சயம் வழங்குவோம் என கூறினார்.
0 Comments