Subscribe Us

header ads

நபிகள் நாயகத்தின் நற்பண்புகள் என்ற கட்டுரைப் போட்டியில் பரிசு வென்ற இந்து மாணவி!

 நாயகம் குறித்த கட்டுரைப் போட்டியில் இந்து மாணவி பத்மா இரண்டாம் பரிசு வென்றுள்ளார்.

ஐதராபாத்தில் ஜமாஅத் எ இஸ்லாமி ஹிந்து மாணவர்களுக்கு நடத்திய  நபிகள் நாயகம் குறித்த கட்டுரைப் போட்டியில் 'நபிகள் நாயகத்திடம் நற்செயல்கள்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பி.பத்மஜா என்ற இரண்டாம் ஆண்டு இடைநிலை இந்து மாணவி இரண்டாம் பரிசு வென்றார். அவருக்கு ரூ 25000 பரிசாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பத்மஜா," முஹம்மது நபி பெண்கள் சம உரிமைகளுக்கு பல நற்போதனைகளை வழங்கியுள்ளார். மேலும் அவர் ஒரு முன்மாதிரி. இந்த போட்டி நம் அனைவருடைய ஒற்றுமைக்கும் ஒரு எடுத்துக்காட்டு" என்றார்.

இந்த போட்டியில் பங்கேற்க போட்டி நடைபெறும் முதல் நாள்தான் தயாரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments