கல்பிட்டியில் மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக சின்னக்குடியிருப்பு கிராம மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். காணிகளுக்குள் மழை நீர் நிரம்பிக்காணப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யகூட சிரமமான நிலைமையே காணப்படுகின்றது, பல வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்திருப்பதும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு மழை தொடருமாக இருந்தால் இம்மக்கள் வேறு இடங்களை நாடிச்செல்ல வேண்டிய நிலையே ஏற்படும்.
தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக கல்பிட்டியில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆனவாசல் , மாவடி, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
-Rizvi Hussain-
0 Comments