Subscribe Us

header ads

வாடகை பிரச்சினையால் மூடப்பட்டிருந்த கல்பிட்டி தையல் பயிற்சி நிலையம் ACMC கல்பிட்டி அமைப்பாளரின் முயற்சியினால் மீண்டும் திறக்கப்பட்டது.


அன்மையில் கல்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வணிக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் கெளரவ ரிஸாத் பதியுதீன் அவர்கள்,மாவட்ட அமைப்பாளர்,கல்பிட்டி பிரதேச அமைப்பாளர்கள் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.இருந்தாலும் ஐந்து மாதங்களின் பின் வாடகை பிரச்சினையால் வீட்டு சொந்தக்காரரால தையல் பயிற்சி நிலையம் பூட்டப்பட்டது இதனால் யுவதிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர் இது சம்பந்தமாக எனது முகநூலிலும் ஒரு பதிவும் போட்டிருந்தேன்.

இத்தையல் பயிற்சி நிலையமானது அரசினால் தையல் பயிற்சி நிலையத்தை நடத்துவதற்கான மாதாநத வாடகைப்பணம் அரசினால் வழங்கப்படுவதற்கு முன்னால் தையல் நிலையத்திற்கான வீட்டை கூலிக்கு அமர்த்தியதினால் ஏட்பட்ட சட்டசிக்களால் வீட்டு உரிமையாளருக்கும் நிர்வாகத்திற்கும் சிறியதொரு கருத்து வேறுபாட்டினால் தையல் பயிற்சி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது என்றும் .தற்போது ACMC கல்பிட்டி அமைப்பாளரும் முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான S.A.எஹியா அவர்களினால் 75000/= ரூபாய் பணம் தனது சொந்த நிதியிலிருந்து வீட்டு உரிமையாளருக்கு வழங்கப்பட்டு வீட்டினுடைய சாவியை தையல் பயிற்சி நிலைய பொருப்பாளர் சகோதர் நாசிரிடம் ஒப்படைத்ததாகவும் தற்போது சிறநத முறையில் தையல் பயிற்சி நிலையம் இயங்கி வருவதாகவும் என்னிடம் ACMC கல்பிட்டி அமைப்பாளர சகோதரர் S.A.எஹியா அவர்கள் தெரிவித்தார்கள்.

தற்போது இப்பயிற்சி நிலயம் இயங்கி வருவதை என்னால் அவதானிக்க முடிந்தது அதே போல் யுவதிகளின் முகத்திலும் இது மீண்டும் திறக்கப்பட்டதால் சந்தோஷத்தையும் அவதானிக்க முடிந்தது .உடனடியாக இப்பிரச்சினைக்கு முடிவு எடுத்த ACMC கல்பிட்டி அமைப்பாளர் S.A. எஹியா அவர்களுக்கு யுவதிகளின் பெற்றோர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதோடு மீண்டும் இவ்வாரான பிரச்சினைகள் ஏற்படாமல் தொடர்ந்து சிறந்த முறையில் இயங்கி பயிற்சியை முடிப்பதற்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மூடப்பட்டதை பதிவாக போட்ட எனக்கு திறக்கப்பட்டதையும் பதிவாக போடுவது கடமை என நினைக்கிறேன்.









Post a Comment

0 Comments