Subscribe Us

header ads

அழுத்கமைக்கே தீர்வை பெற்றுக்கொடுக்காத அரசு,கிந்தோட்டைக்கி பெற்றுக்கொடுக்கப் போகின்றதா?


அழுத்கமைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காத இவ்வரசுகிந்தோட்டைபிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் என நம்புவதைப் போன்ற ஏமாளித்தனம் வேறுஏதுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அளுத்கமை சம்பவம் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸநாட்டில் இருந்திருக்கவில்லைஅவர் இருந்திருந்தால் அது அத்தனை தூரம் பெரிதாகசென்றிருக்காதுஅவர் நாடு திரும்பியதும் வேறு எங்கும் செல்லாது பாதிக்கப்பட்டபகுதிக்கே விஜயம் செய்திருந்தார்இன்றைய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனநாட்டில் தான் உள்ளார்இருந்தும் கிந்தோட்டை பக்கம் செல்லவில்லை என்பதே இருஜனாதிபதிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் கொண்டுள்ள கரிசனையை எடுத்துகாட்டுகிறதுஅவ்வாறு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாகபெருந்தொகை பணத்தை ஒதுக்கி இராணுவத்தினரை கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களைமிகக் குறுகிய புணரமைப்பு செய்து கொடுத்தார்.

குறித்த பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்று புணரமைத்துதருவோம் என கூறியிருந்தாலும் செயலில் எதனையும் இதுவரை செய்யவில்லை.அவரின் பல பேச்சுக்கள் வாயளவில் முற்றுப்பெருவதும் யாவரும் அறிந்த விடயம்இந்தபிரச்சினையின் அடிப்படையாக  யார்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்குறிப்பாகஅசாத்சாலிஅமைச்சர் றிஷாத் பதியுர்தீன் போன்றவர்கள் யாரோ ஒரு மதகுரு இதனைதலைமை தாங்கி செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர்இவர்களை விசாரித்து குறித்த மதகுரு யார் என்பதை அறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும்

இவ்வாட்சி அமைத்தலுக்கு முஸ்லிம்கள் வாக்குகள் ஓரிடத்தில் குவிந்தமையே பிரதானகாரணமாகும்அவ்வாறு குவிய அலுத்கமை கலவரமே முதன்மை காரணமாகஅமைந்திருந்ததுஇப்படியான விடயத்தை இவ்வரசு இது வரை ஒரு பொருட்டாகவேகவனிக்கவில்லைசில வேளை ஜனாதிபதி கிந்தோட்டை சம்பவத்தில் கரிசனை அற்றுமுஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே கவனிக்காது நடப்பதைப் போல் அளுத்கமைவிடயத்திலும் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்தை ஒரு பொருட்டாகவேகணக்கிடாமல் இருக்கலாம்இப்படியான அரசிடம் சென்று கிந்தோட்டைக்கு நியாயம்தேடுவதைப் போன்ற ஒரு ஏமாளித் தனம் வேறு எதுவுமில்லை.

நன்றாக சிந்தித்து பாருங்கள்இலங்கையில் எரிபொருள்  தட்டுப்பாடு ஏற்பட்ட போதுஅதற்கான காரணம் அறிய ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்ததுஅந்த குழுவில்எரிபொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட வேறு சிலரும் இருந்தனர்அந்தஅறிக்கையும் மிக விரைவாக வெளிவந்ததுகிந்தோட்டை சம்பவத்துக்கான அறிக்கைசமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்இது நியாயமான அறிக்கையாக இருக்கமுஸ்லிம் அமைச்சர் ஒருவராவது குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த அறிக்கை தாருங்கள் என்பதெல்லாம் வெறும் கண் துடைப்புச் செயற்பாடுகள்.மர்ஹூம் அஷ்ரபின் மரண அறிக்கை காணாமல் போனது போன்று இதுவும் காணாமல்போய்விடும்அன்று அந்த அறிக்கை வந்த போது ஆட்சி செய்தவர்களே இன்றுஇவ்வாட்சியின் முக்கியஸ்தர்களாவர் என்பது குறிப்படத்தக்கது.

Post a Comment

0 Comments