தீக்குளிப்பு சம்பவத்தை போட்டோ எடுத்த பத்திரிக்கையாளர்களை சமூகவளைதளங்களில் விமர்சித்தும் சபித்தும் வருகின்றனர்.
அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட தீ இன்று நம்மீது சுட்டதுபோல் நாம் கொதிக்க காரணமே, அவர்கள் எரியும்போது நிருபர்கள் எடுத்த அந்த எரியும் புகைப்படங்கள் தான்.!
எரிந்த சடலத்தை மட்டும் போட்டோ எடுத்திருத்தால் அந்த செய்தியினை நாம் பத்தோடு பதினொன்றாகத்தான் பார்த்திருப்போம்.!
சரி! அவர்களுக்கு மனிதநேயம் இல்லையா என்றும் பலரும் கூறுகின்றனர்....
இதோ அவர்களுக்கான புகைப்படங்கள்.....
தீக்குளிப்பு கொடுமையை உலகிற்கு கூற பதிவு செய்துவிட்டு கண்ணீரோடு ஓடி உதவியும் செய்துள்ளனர் அந்த ஊடக நண்பர்கள்.!
வழியறியாமல் வசை பாட வேண்டாமே.!
-பாரூக் சைதாப்பேட்டை
0 Comments