இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 24 மணி நேர இஸ்லாமிய வானொலி சேவை முழு உலகையும் எட்டும் வண்ணம் புத்தளத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டது...
புத்தளம் மாவட்ட ஜமியத்துல் உலமா தலைவர் மஹ்மூத் அப்துல்லாஹ் ஆலிம் விழாவை அங்குரார்ப்பணம் செய்து வைத்த கையோடு முதலாவது நபராக செரெண்டிப் வானொலி ஊடாக தனது வாழ்த்தையும் தெரிவித்தார்...அவரை தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், இப்ராஹீம் நிஹ்ரீர், மிராஜ் பைரூன், டொக்டர் இல்லியாஸ், கரைதீவு இபாம், விருதோடை ஜிப்ரி ஆசிரியர் உட்பட இன்னும் பலரும் செரெண்டிப் ஊடாக தமது செய்திகளை பகிர்ந்து கொண்டனர்...
வானொலி துறையில் பல வருட அனுபவம் கொண்ட இச்சேவையின் பணிப்பாளர் சகோ.நபீஸ் குறிப்பிடும்போது...
இந்த செரெண்டிப் வானொலி சேவை தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களால் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் பல்வேறு போராட்டம் மற்றும் முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்டது...காரணம் மாற்று மதத்தவர்களின் சமயம் சம்பந்தமான வானொலி சேவைகளுக்கு அரசாங்கங்கள் அனுமதி கொடுப்பதில்லை...அதையும் தாண்டி பெறப்பட்டதே இந்த 24 மணி நேர வானொலி சேவையாகும்...
இந்த சேவையில் கட்சி பேதங்களுக்கோ அல்லது இயக்க வெறுபாடுகளுக்கோ இடமில்லை...பெருமளவில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளே இடம்பெறும்...அஷ்ஷெய்ஹ் ஷாபி சஹ்தி, அஷ்ஷெய்ஹ் ரியாஸ் ஹாபிஸ் ஆகியோர் இஸ்லாமிய நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துவர்...
புத்தளம் சம்பந்தமான செய்திகளுக்கு இச்சேவையில் முக்கியத்துவம் வழங்கப்படும்...
இந்த செரெண்டிப் FM சேவை முஸ்லிம்களின் உரிமையை நிலை நிறுத்திய அதி முக்கியமான ஒன்றாகும்...அதனைப் பெற்றுத்தந்த தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை..
-Ibrahim Nihrir-
0 Comments