Subscribe Us

header ads

ஈராக்குக்கும் குர்திஸ்தானுக்கும் இடையில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் வெடிக்கும் அபாயம்


எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி நடக்கவிருக்கும் குர்திஸ்தான் என்ற தனி நாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பை ஈராக் பாராளுமன்றமும் அரபு லீக்கும் நிராகரித்துள்ளன.
இந்த பிராந்தியத்தில் அரபு அல்லாத ஏனைய 3 நாடுகளில் துருக்கியும், ஈரானும் குர்திஸ்தான் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று அறிவித்துள்ளது.
கடந்த 35 வருட ஈராக்கிய வரலாறு முழுவதும் வன்முறையும் யுத்தமுமாகவே இருந்திருக்கிறது. ஒவ்வொரு யுத்தத்திற்கும் பின்னணியில் சர்வதேச மறைகரங்கள் இருந்திருக்கின்றன.
1980-88 வரை எட்டு வருடங்கள் ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையில் யுத்தம், அந்த யுத்தம் முடிந்ததும் 1990 இல் குவைத் நாட்டை ஈராக் ஆக்கிரமித்தது. உடனே கூட்டணி நாடுகள் இணைந்த பெரும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உட்கட்டமைப்புக்கள் அழித்தொழிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னர் பல வருடங்கள் ஈராக் பொருளாதார தடை உட்பட்டு இருந்தது, அதன் பின்னர் 2003 அமேரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது. அதன் பின்னர் 2010 வரை தீவிரமான கிளர்ச்சி யுத்தம் நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக ஐஸ்ஐஸுக்கு எதிரான பெரும் யுத்தம் நடந்தது. தற்போது ஐஸ்ஐஸின் கதை முடிவடையும் நிலையில் குர்திஸ்தானை கொண்டு வந்திருக்கிறார்கள்.

குர்திஸ்தான் பிரகடனமப்படுத்தப்பட்டால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பதுடன் அனேகமாக ஈராக்குக்கும் குர்திஸ்தானுக்கும் இடையில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருக்கிறது.

அப்படியொரு யுத்தம் ஏற்பட்டால் அது எப்போது முடிவடையும்.? !!

-Dilshan Mohamed-

Post a Comment

0 Comments