உலகளாவிய நாடுகளில் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக ய இலங்கை விளங்குகின்றது.
அழகான கடற்கரைகள், புல்வெளிகள், காடுகள், பனைமரக் காடுகள், தென்னத் தோப்புக்கள், மற்றும் முகில்கள் கிழித்துச் செல்லும் மலை முகடுகள் என ஒவ்வொரு இயற்கைக் காட்சிகளும் காண்போரைக் கொள்ளை செய்யும் அற்புதமான படைப்புக்களாகும்.
நாட்டில் மூவின மக்கள் செறிந்து பரந்து வாழ்ந்தாலும் காலத்துக்குக் காலம் மக்களது வாழ்க்கைக் கோலத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் வந்திருக்கின்றன.
அந்த வகையில், இலங்கையில் இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெளிநாட்டவர் ஒருவர் தான் கண்டு மகிழந்த காட்சிகளைப் படங்களாக்கியிருக்கிறார். ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த டன்கன் என்பவரே 1973ஆம் ஆண்டு இலங்கை வந்தபோது எடுத்த படங்களை தற்பொழுது வெளியிட்டு தனது அன்றைய அழகான தருணங்களை அவர் மீட்டிப் பார்த்திருக்கிறார்.
அவர் பகிர்ந்த அந்தப் புகைப்படங்கள் தற்பொழுது பலராலும் பகிரப்பட்டுவருகின்றது. சிலர் அவற்றைப் பகிர்கின்றபோது தமது அந்த நாள் ஞாபகங்களை அழகாக மீட்டியிருந்தமையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அன்றைய இலங்கை மக்கள் எவ்வாறான வாழ்வியலில் வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் தனது புகைப்படங்களை அவர் ஸ்ரீலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஒப்படைத்துள்ளார்.
0 Comments