Subscribe Us

header ads

“விட்டுக்கொடுப்பின்மையே விவாகரத்துகளுக்கு அடித்தளம்”

இயந்­தி­ர­ம­ய­மான இந்­ந­வீன யுகத்தில் மனி­த­னிடம் மனி­தா­பி­மானப் பண்­புகள் அருகி வரு­கின்­றன.

தன்­னலம் தான் எங்கும் நிறைந்­தி­ருக்­கி­றது.

எங்கு பார்த்­தாலும் வன்­மு­றை­களும் சச்­ச­ர­வு­களும் இடம்­பெற்ற வண்ணம் உள்­ளன. அவற்றில் குடும்­ப­வன்­மு­றை­களின் பங்கும் பிர­தா­ன­மா­னது.

குடும்­பத்தில் கணவன் மனை­வி­யி­டையே ஏற்­படும் கருத்து மோதல்கள் தான் வலு­பெற்று குடும்ப வன்­மு­றை­யாக விவா­க­ரத்து மேடை­க­ளுக்கு அத்­தி­வா­ர­மிட்­டுள்­ளது.

இன்­றைய கால கட்­டத்தில் நிச்­சய திரு­ம­ணத்தை பார்க்­கிலும் பெரும்­பா­லா­ன­வர்கள் காதல் திரு­மணம் செய்து கொள்­வ­தையே விரும்­பு­கின்­றனர்.

காரணம், புரி­த­லு­ட­னான கருத்­தொ­ரு­மித்த வாழ்க்­கை­யினை அமைத்துக் கொள்ள வேண்டும் எனும் அடித்­த­ளத்தில்! இருப்­பினும் இவ்­வாறு காதல் திரு­மணம் செய்து கொண்­ட­வர்கள் கூட விட்­டுக்­கொ­டுப்­பின்மை, புரிந்­து­ணர்­வின்மை, பொறு­மை­யின்மை, அதித கட்­டுப்­பாடு போன்­ற­வற்றின் நிமித்தம் பிரிந்து வாழ்­வதை இன்­றைய சமு­தா­யத்தில் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

குடும்ப வாழ்வில் கைகோர்த்த பின் ஒரு­வ­ருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்­டிய தேவை­யுள்­ளது.

குடும்­ப­மா­னது, தனி­ம­னித வாழ்­வி­ய­லோடும் சமூக வாழ்­வி­ய­லோடும் தொடர்­பு­பட்­டது.

ஆகையால் இதில் விட்­டுக்­கொ­டுப்பு பெரும்­பங்கு வகிக்­கின்­றது. பிரச்­சி­னை­களும் சவால்­களும் இல்­லாது போனால் வாழ்வில் சுவா­ரஸ்­ய­மி­ருக்­காது.

இதனை உணர்ந்து கொண்டு அதற்­கான தீர்­வு­களை நுட்­ப­மாக கையாள்­ப­வர்­களின் வாழ்வு சிறப்­பாக அமையும். ஆனால் எதிர்­பா­ராத வித­மாக நாம் எடுக்கும் திடீர் முடி­வுகள் எம் வாழ்­வி­னையே கேள்­வி­க்கு­றி­யாக்­கி­விடும் என்­பதால் குடும்ப வாழ்­வினை பொறுத்­த­வ­ரையில் எந்த பிரச்­சி­னை­யா­கட்டும், அதற்­கான தீர்­வு­க­ளா­கட்டும் ஒரு முறைக்கு பல முறை சிந்­தித்து செயல்­பட வேண்­டிய காட்­டா­யமும் தேவையும் உள்­ளது.

காரணம் இந்­நிலை கணவன் மனைவி இரு­வரை மட்­டு­மல்­லாது இவர்கள் சார்ந்த அனைத்து சமு­தா­யத்­தி­னையே பாதிப்­புக்­குட்­ப­டுத்­த­வல்­லது.

ஆகையால் குடும்பம் வாழ்வு பிற­ருக்கு எடுத்­துக்­காட்­டாக அமைய வேண்­டுமே தவிர விதி­வி­லக்­காக அமைந்­து­வி­டக்­கூ­டாது.

ஆகையால் சந்­தேகம் தீயை ஏற்­ப­டுத்த வல்­லது.

வாழ்வில் நிம்­ம­தியை சீர்­கு­லைக்­க­வல்­லது. வள்­ளு­வனின் ஈர­டிக்­கு­ற­ளினைப்­போல இவர்கள் இணைந்து வாழ­வேண்டும் காரணம் ஓரடி குறள் பொருள் தராது என்­ப­தனை புரிந்துக் கொள்ள வேண்டும். எண்­ணங்கள் ஒன்­றுப்­பட்டு அமைய வேண்டும்.

கணவன் ஒரு யோச­னையை முன்­வைத்­தாலோ அல்­லது செயற்­பா­டொன்றை செய்ய விழைந்­தாலோ மனைவி அதன் நன்மை தீமை­களை விளக்கி அச்­செ­யலை வெற்­றிக்­க­ர­மாக முடிக்க உறு­துணைப் புரிய வேண்டும்.

கண­வனும் இதற்கு விதி­விலக்­கல்ல. இதனை விடுத்து கண­வனோ மனை­வியோ செய்யும் செய­லுக்கு ஊறு விளை­வித்து விட்­டுக்­கொ­டுக்­காது ஒரு­வ­ருக்­கொ­ருவர் எதி­ரியைப் போல் ஆகி­வி­டக்­கூ­டாது. விட்­டுக்­கொ­டுப்பு என்­பதை சற்று சிந்­திப்­போ­மானால் கணவன் மனைவி எனும் பந்தம் புனி­த­மான ஒரு இணைப்பு.

பிறகு எதற்­காக இந்த பிரி­வினை என மனம் விட்டு சிந்­திக்கும் போது பிரச்­சி­னைகள் பின் தள்­ளப்­ப­டு­கி­றது.

ஒரு­வரின் மேல் ஒருவர் கொண்­டுள்ள ஈடு இணை­யற்ற அன்பு, பாசம், உதவி, பிணைப்பு, அர­வ­ணைப்பு இவற்­றுக்கு மத்தியில் விட்டுக்கொடுப்பென்பது சாதாரண விடயம்.

அத்தோடு எதிர்பாராது எடுக்கப்படும் திடீர் முடிவுகளால் பிரிந்து வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளாமல் எம் எண்ணங்களில் தூய்மையை விதைத்துக் கொண்டால் விட்டுக்கொடுப்பது சுலபமாகி விடும்.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது விவாகரத்து மேடைகளை தகர்ப்போம்.

Post a Comment

0 Comments