Subscribe Us

header ads

வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்கவை உயர்பீடத்தில் வைத்து சந்தித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்


வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென்ற  அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் நேற்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். 
 ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற  அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் பின்னர் சுமார் ஒரு ­ம­ணி­நேர இந்த முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. அமைச்சர்  ரவி கரு­ணா­நா­யக்க பத­வி­வி­லக வேண்­டு­மென்ற கோரிக்­கைகள், அதி­க­ரித்து  வரு­கின்ற நிலையில் ஜனா­ தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளமை  முக்­கி­ய­வி­ட ய­மாக கரு­தப்­ப­டு­கி­றது.  இதன் ­போது  அமைச்­ச­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும்  கட்­சி­க­ளுக்குள் ஏற்­பட்­டுள்ள நிலை­மைகள் அர­சாங்கம் தொடர்பான மக்­களின் விமர்­ச­னங்கள் குறித்தும் பேசப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 விசே­ட­மாக  ஏற்­க­னவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை பதவி வில­கு­மாறு கூறி­ய­தாக  தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லேயே இந்த சந்­திப்பு இடம்பெற்றுள்ளது. 
 நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும்  ரவி கருணாநாயக்க தொடர்பாக  கடும் வாதப் பிரதிவாதங்கள்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments