![]() |
file picture |
கலேவெல பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சிறிய குடிசை ஒன்றில் தனிமையாக வாழ்ந்து வருகின்றார்.
குறித்த சிறுமி தனது சிறிய வயதிலே தனது தந்தையை இழந்துள்ளதுடன், தாய் மகளை விட்டு சென்றுள்ள நிலையில், மாணவி யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
தந்தையை இழந்த பின்னர், பெரும் பிரச்சினைகளை அவர் தனிமையாக எதிர் நோக்கியுள்ளாக குறிப்பிடப்படுகிறது.
கூலி வேலை செய்து தனது கல்வி நடவடிக்கையையும், வாழ் நாளையும் அவர் கழித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறிய குடிசைக்கு பதிலாக வீடு ஒன்றை மாணவிக்கு பெற்றுக் கொடுப்பதற்கு, நகர்ப்புற அதிகாரிகள் மற்றும் கலேவெல செயலாளர் பிரிவு காரியால அதிகாரிகள் மாணவியை சந்தித்துள்ளனர்.
எனினும் தான் எதிர்காலத்தில் ஓர் ஆசிரியராக பணி புரிவதே என மாணவி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவிக்கு வீடு ஒன்றினை பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 Comments