அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் ஊழல்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஊழல்திணைக்களத்திற்கு கடந்த 06.03.2015 ஆம் திகதி என்னால் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போதுஇரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை லஞ்ச ஊழல் திணைக்களம் விசாரணை செய்ததாக எந்தத் தகவலும் இதுவரையும் நாட்டுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை,
ஆனால், அமைச்சர் தொடர்பாக மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகவல்களையும் லஞ்சஊழல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க உள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்.
எனவே, இப்புதிய ஊழல்கள் மற்றும் பழைய ஊழல்கள் என்பவற்றை உடனடியாக விசாரிக்குமாறு லஞ்ச ஊழல்திணைக்களத்திடம் வேண்டிக் கொள்வதற்காக வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு ( 17-08-2017) லஞ்ச ஊழல் தினைகளத்துக்கு வந்து மேலதிக தகவல்களைப் பெற்று நாட்டு மக்களுக்குதெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்ளுகின்றேன்.
இதன் மூலம் இந்நாட்டில் ஜனநாயகம், நல்லாட்சி என்பவற்றை மலரச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிஉதவுமாறும் தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், இவ்வமைச்சர் அரசில் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால், விசாரணைகள் இடம்பெறவில்லையாஎன்கிற சந்தேகம் எனக்கு நிலவுகிறது. ஆகவே, இவரை தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிசாரணைகளை மேற்கொள்ளுமாறு இந்நாட்டுப் பிரஜை என்ற முறையில் கோரிக்கையை முன்வைக்கிறேன்.
இப்படிக்கு
ராஸிக் முஹம்மத் குவைதிர்கான்
0779009772
0 Comments