இலங்கையில் மர்மங்கள் பல நிறைந்த பகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
150 வருடங்கள் பழமையான பகுதி தொடர்பில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் பகுதியில் பேய்கள் மற்றும் மர்ம நிகழ்வுகளுக்கு பிரபலமான இடம் ஒன்று இன்னமும் இலங்கையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த இடம் தொடர்பில் ஆர்வம் காட்டு நபர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அந்த இடத்தை தேடிச் சென்றாலும் அந்த நபர்களின் அவதானத்திற்கு உட்படாத சில விடயங்கள் தெரியவந்துள்ளது.
திக்கந்த வலவ்வ என்ற இந்த இடம் அமானுஷ்ய சம்பவங்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு இடமாகும்.
கம்பஹா கிரின்தவெல 231 பஸ் வீதி திக்கந்த என்ற கிராமத்தில் இந்த வலவ்வ அமைந்துள்ளது.
1000 ஏக்கருக்கும் அதிமாக பாரிய இடம் மலையின் மேல் அமைந்துள்ளது. அதனை பார்க்கும் போதே அமானுஷ்யம் நிறைந்தவையாக காணப்படுகின்றன.
திக்கந்த வலவ்வவின் தற்போதைய உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளமையினால் அந்த இடம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.
கண்டுபிடிப்பாளர்களுக்கு அந்த இடத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்காமையினால் திக்கந்த வலவ்வ இலங்கையில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்பில் பேசப்படும் இடங்களில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments