Subscribe Us

header ads

ரவியின் ராஜினாமா நல்லாட்சியின் களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் ; நாமல் ராஜபக்ஸ


ரவியின் இராஜினாமா களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டுவிட்டதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் இதுவிடயமாக கருத்து வெளியிட்ட அவர்,

ஊழல் விவகாரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமைச்சர் ரவி கருநானயக்கார தனது பதவியைஇராஜினாமா செய்திருந்தார்.இது நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு நல்லாட்சி நாடகமாகும் .

இந்த இராஜினாவானது ஒரு தற்காலிகமானது என்பதை அமைச்சர் ராஜித அமைச்சரவை கூட்டத்திலும் உறுதிசெய்திருந்தார்.மேலும்அமைச்சர் நவின் திஸாநாயக்கவும் இதனை உறுதி செய்துள்ளார்.இராஜினாமாவின் காலஎல்லை மூன்று மாதம் என்றும் பேசப்படுகிறது. 

ரவி கருநாணாயக்கார தற்காலிகமாக இராஜினாமா செய்வதானால் அப்படியொரு இராஜினாமா செய்திருக்க வேண்டியஅவசியமில்லை.மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமாக இருந்தால் ஒரு இலட்சம் கோடி ஊழல் பிரச்சினையில்இருந்து தப்பிக்க சில காலங்கள் இராஜினாமா செய்வது பெரிய விடயமுமல்ல.குறித்த மிகப் பெரும் ஊழல் தொடர்பானவிசாரணைகளை மூன்று மாதகால எல்லையினுள் முடித்துவிட மாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊழல் செய்தார் என இவ் ஆட்சியாளர்கள் ஆட்சியமைத்த நாள் முதல் இன்றுவரை விசாரணை செய்துகொண்டிருக்கின்றனர். 

விசாரணைகளை முடிவு செய்யாமல் மஹிந்த திருடியதாக கூறும் இவர்கள் ரவியின் விசாரணைகளையும் இழுத்தடிப்புசெய்து அவர் நிரபராதி என காலம் கடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments