அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஹட்லிசேரா என்னும் ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஃபெய்சுதீன் லஷ்கார். இவர் தன்னிடம் அவருடைய மாணவிகளுடன் வகுப்பறையில் நெருக்கமாக நிற்பது போன்று பல புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்த்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ஆசிரியரை கைது செய்யவில்லை. இதனால் மாணவிகளின் பெற்றோரும் கிராம மக்களும் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
பள்ளி நிர்வாகமும் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர் மீது நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பிரச்சனையைக் குறித்து அசாமில் உள்ள தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஆசிரியர் ஒர் தொடர் குற்றாவாளி என குறிப்பிடுகிறது. உள்ளூர் சேனல் கடந்த காலத்தில்,ஆசிரியர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தபின் அந்த பகுதி மக்களால் துரத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் கோபமடைந்த மக்கள் அவரது விரலை துண்டித்து உள்ளனர் என கூறி உள்ளது.
0 Comments