Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (ஆடையும் பீடையும்) கவிதை தொகுப்பு.



மூடாதே என்று சொன்னார்

மூடர்கள் கூட்டம் சேர்ந்து
கூடாத வார்த்தைகளினால்
கொச்சையாய்க் கேலி செய்தார்



காட்டி உடு என்றார்
காட்டமாய் கூறி நின்றார்
கேட்டால் நாகரிகமென
கூட்டாய் பதில் சொன்னார்



பறந்து வந்த நுளம்புக்கூட்டம்
திறந்த காலில் கடித்துப் போட
இப்போது சொல்லுகின்றார்
அப்படியே மூடட்டாம்.



டெங்கிலும் பல ம டங்கு
டேஞ்சரான சில பேர்கள்
அ டங்காமல் ரசிப்பதெல்லாம்
ஆபத்தென்னு தெரியலையா?



குத்திக் காட்டினியே
குத்தம் சுமத்தினியே
குத்துற நுளம்பு கண்டா
புத்தி புறந்திருக்கு



மறைத்து அணி என்று
மறை சொன்ன கட்டளையை
குறை கூறித் திரிந்தவரே
குரைப்பீரோ இன்னமும்.



சத்தியம் சாகாது
சரித்திரம் சொல்லும் உண்மை
குத்திக் காட்ட சொல்லவில்லை
கொண்ட கவலையில் எழுதியது.

Post a Comment

0 Comments