Subscribe Us

header ads

பௌத்த மதத்துக்கு ஏற்படப் போகும் ஆபத்தைத் தடுப்பதற்கு எதிர்ப்பதற்கு பௌத்த தேரர்கள் ஒன்றிணைய வேண்டும்



உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு ஏற்படப் போகும் ஆபத்தைத் தடுப்பதற்கும் சமஸ்டித் தீர்வைத் எதிர்ப்பதற்கும் பௌத்த தேரர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மஹிந்த அணி எம்பி உதய கம்மன்பில கூறியுள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த அரசு பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.அவற்றுள் ஒன்றுதான் புலம்பெயர் தமிழர்களுக்கும் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி.எல்லா வாக்குறுதிகளை விடவும் அந்த  வாக்குறுதிதான் நாட்டுக்கு ஆபத்தானதாகும்.

வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படும் என்பதுதான் அந்த வாக்குறுதி.சமஷ்டி சாதாரண தீர்வு அல்ல.நாட்டை இரண்டாக்கப் பிரித்து ஒரு பகுதியை தமிழர்களிடமே ஒப்படைத்துவிடும் யோசனைதான் இந்த சமஷ்டியில் அடங்கி இருக்கின்றது.

இந்தத் தீர்வை வழங்குவதற்கு ஏதுவாகத்தான் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படவுள்ளது.அரசில் உள்ளவர்களாக இருந்தாலும் நாட்டுப் பற்றாளர்கள் எவரும் இதை ஆதரிக்கமாட்டார்கள்.ஐக்கிய தேசிய கட்சியின் எம்பிக்கள் இந்த அரசமைப்பைத் தோற்கடிக்கடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர்.இந்த நாட்டு மக்கள் எவரும் இதை ஆதரிக்கமாட்டார்கள்.

சமஸ்டித் தீர்வை வழங்குவதற்கு எவ்வாறு அரசு திட்டமிட்டுள்ளதோ அதேபோல்தான் பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை ஸ்தானத்தை நீக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.சமஸ்டியைப்போல் இதுவும் எமக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதே.

பௌத்த மதத்திற்கான முக்கிய இடம் நீக்கப்பட்டால் இந்த மதம் பல இன்னல்களை இந்த நாட்டில் எதிர்கொள்ளும்.இதைப் பாதுகாக்கும் பொறுப்பு பௌத்த தேரர்கள் அனைவரிடமும் உண்டு.இதற்காக தேரர்கள் அனைவரும் ஒன்றிப்பட வேண்டும்.

புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த நாம் மீண்டும் அவர்களிடம் அதைத் தாரைவார்த்துக் கொடுப்பதற்ககோ பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை ஸ்தானம் நீக்கப்படுவதற்கோ நாம் ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம்.இதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடுவோம்.-என்றார்

Post a Comment

0 Comments