பொதுவாகவே எந்த கடைகளுக்கு சென்றாலும் அங்கே ஏதேதும் ஒரு பொருள் நம்மால் சேதாரம் ஆனால் அதற்கு நாம் தான் பொறுப்பு உடைந்த பொருளுக்கு ஏற்ற பணத்தை தர வேண்டும். அதே போல சீனாவில் நகை கடைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் நகை பார்க்க சென்ற ஒரு பெண், அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரேஸ்லேட்டை பார்த்துக்கொண்டிருக்கும் போது, அதில் ஒன்று பிடித்து அதை கையில் எடுத்து பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்து விட்டது.
அந்த பிரேஸ்லெட்டில் விலை 44,100 டாலர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.28 லட்சம். அப்போது கடைக்காரர் அந்த பிரேஸ்லெட்டின் விலை 3 லட்சம் யென்கள் என்றவுடன் அந்த பெண் அச்சமடைந்தார். அப்போது அந்த பெண் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பெண்ணின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இழப்பீட்டை பேசி தீர்த்து கொள்ள கடைக்காரர் முடிவு செய்தார். இதனால் இந்த விவகாரம் போலீஸுக்கு தெரியப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த பிரேஸ்லெட்டின் விலை 3லட்சம் யென்கள் அளவுக்கு மதிப்பில்லை என்று இணையதளத்தில் பரவலாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் 70,000 யென்களை இழப்பீடாக தர முன்வந்துள்ளனர்.
இதில் இருந்து என்ன தெரிகிறது கடைக்கு போகும் போது பொருட்கள் வாங்குகிறோமோ இல்லையோ கண்ட இடத்தில் கைவைத்து சிக்கலில் சிக்காமல் இருந்தால் சரிதான்.
0 Comments