Subscribe Us

கொழும்பில் 660 ஒரிஜினல் பிச்சைக்காரர்கள், ஆனால் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்வோர் போலி 4 000 பேர்! திடுக்கிடும் தகவல்!


கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில், உண்மையான யாசகர்கள் 660 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், எஞ்சிய 4,000 பேரும் தொழில் யாகசர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டிலேயே மேற்கண்ட விவரம் கண்டறியப்பட்டுள்ளது.

4,000 தொழில் யாகசர்களையும், வழிநடத்துவதற்கென சிலர் இருக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், யாசகர் போல தொழில்புரிவோர், கொள்ளை மற்றும் சமுகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments