தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.
இந்த பதக்கத்தின் பெறுமதியை உலகம் அறிந்து கொண்டுள்ள போதிலும் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் அறிந்து கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்தார்.
இந்த பதக்கம் இந்த அளவு பெறுமதியானதென தான் அறிந்து கொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய இந்த பதக்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் விளையாட்டு துறை அமைச்சரின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும்.
அத்துடன் இலங்கையின் விளையாட்டு துறையை வளர்ப்பதற்கு கூட தன்னால் நிதி வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments