(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் சனிக்கிழமை (10) கொழும்பு அல் - ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில், இலங்கை பொன்மனச் செம்மல் எம்.எஸ்.தாஜ்மஹான், சத்திய எழுத்தாளர் நாகூர்கனி, எம்.எஸ்.எம். ஸப்ரீஸ், ஹம்சடீன், ஆப்டீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ரமழான் நற்சிந்தனை றிஸ்வான் மௌலவி(இஸ்லாஹி) துஆ மொஹிடீன் மௌலவி கஸீதா அம்மார் அன்வர், சஹிர் பர்வின் பைஸர் ஆகியோர் நிகழ்த்தினர்.
நன்றியுரையை செம்பய் ரீ.எம். பாஹிம் வழங்கியதோடு, நிகழ்வை இர்ஷாத் தொகுத்து வழங்கினார்.
ஒர் அடைவு மட்டத்திலிருந்து அடுத்த அடைவு மட்டத்திற்குச் சென்ற கராத்தே வீரர்களுக்கும் மற்றும் கராத்தேயில் சாதனை நிகழ்த்தியோருக்கும் இதன் போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments