Subscribe Us

header ads

இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற்றே ஆக­வேண்டும் என்ற கட்­டாய நிலையில் இலங்கை


இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­கான குழு 'பி' கிரிக்கெட் போட்டி கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற்றே ஆக­வேண்டும் என்ற கட்­டாய நிலையில் உள்ள இலங்­கைக்கு வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­டு­வது ஓர­ளவு தெம்பைக் கொடுக்கும் என கரு­தப்­ப­டு­கின்­றது.


தான் முழு­மை­யான உடற்­த­கு­தியைக் கொண்­டி­ருப்­ப­தாக மெத்யூஸ் கூறு­கின்­ற­போ­திலும் பந்­து­வீச்சில் ஈடு­ப­ட­மு­டி­யா­ததால் அவர் அரை குறை உடற்­த­கு­தி­யுடன் விளை­யா­ட­வுள்­ள­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.


உபுல் தரங்­க­வுக்கு இரண்டு போட்டித் தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நிரோஷன் திக்­வெல்­ல­வுடன் குசல் ஜனித் பெரேரா ஆரம்ப வீர­ராக விளை­யா­ட­வுள்ளனர்.

 
இந்­தி­யா­வு­ட­னான போட்­டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­வந்­துள்ள திசர பெரேரா இன்­றைய போட்­டியில் விளை­யா­டு­வா­ராக இருந்தால் அவ­ருக்கு அசேல குண­ரட்ன அல்­லது சீக்­குகே பிர­சன்ன வழி­வி­ட­வேண்­டி­வ­ரலாம். அத்­துடன் சுரங்க லக்­மா­லுக்குப் பதி­லாக நுவன் குல­சே­கர விளை­யா­டு­வ­தற்கும் வாய்ப்­பி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.


எது எவ்­வா­றா­யினும் இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெ­று­வ­தற்­காக அணி முகா­மைத்­துவம் நன்கு சிந்­தித்து இறுதி அணியைத் தீர்­மா­னிக்கும் என்­பது உறுதி.


விராத் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­தி­யாவைப் பொறுத்த மட்டில் இன்­றைய போட்­டியில் வெற்­றி­ பெற்றால் அரை இறுதி வாய்ப்பைப் பெற்­று­விடும். எனவே பாகிஸ் ­தானை திண­ற­வைத்­தது போல் இலங்­கை­யையும் வெற்­றி­கொள்ள இந்­தியா கடு­மை­யாக முயற்­சிக்கும்.

Post a Comment

0 Comments