1783 : ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்து 8 மாதங்களாக குழம்பை கக்கியது. இதன் விளைவாக 9,000 பேர் பலியானதுடன் 7 வருடகால பஞ்சம் ஆரம்பித்தது.
1887 : ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1929 : ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.
1941 : இரண்டாம் உலகப் போரில் சிரியா, மற்றும் லெபனான் மீது நேச நாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன.
1942 : இரண்டாம் உலகப் போரில் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் குண்டுத்தாக்குதலை நடத்தின.
1972 : வியட்நாம் யுத்தத்தின்போது நேபாம் குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நிலையில் 9 வயது சிறுமி பான் தி கிம் புக் வீதியில் ஓடிவரும் பிரசித்தி பெற்ற புகைப்படத்தை ஏ.பி. செய்திச்சேவை படப்பிடிப்பாளர் நிக் உட் பிடித்தார்.
1953, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சியிலுள்ள உணவகங்கள் கறுப்பினத்தவர்களுக்கு உணவு பரிமாறுவதற்கு மறுக்க முடியாதென அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1984 : அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
1992 : முதலாவது உலகச் சமுத்திர நாள் கொண்டாடப்பட்டது.
2007 : அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
2007 : அஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2009 : வடகொரியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் அமெரிக்க ஊடகவியலாளர்கள் இருவருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2013 : இலங்கைக் கடற்பரப்பில் புயல் காரணமாக சுமார் 40 மீனவர்கள் உயிரிழந்தனர்.
2014: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.
0 Comments