Subscribe Us

header ads

சுசந்திகா ஒலிம்பிக் பதக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சு கொள்வனவு செய்யும் - அமைச்சர் தயாசிறி

(லியோ நிரோஷ தர்ஷன்)



சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்­கா­ன­தாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்­பட வேண்டும். அப்­போது பதக்­கங்­களை விற்­பனை செய்­வதை தடுக்க முடியும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

அர­சாங்கம் என்ற வகையில் சுதந்­திக்­கா­விற்கு தேவை­யான அனைத்­தையும் செய்­துள்­ளது. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம்பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்­டுத்­துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும். அதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.


அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­வுக்கும் ஊடக சந்­திப்பில் நேற்று புதன் கிழமை கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.



அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், ‘‘விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் ஆலோ­ச­க­ராக சுசந்­திகா ஜய­சிங்க இணைத்துக் கொள்­ளப்­பட்டு அவ­ருக்கு மாதம் 60 ஆயிரம் சம்­ப­ளமும், 15 ஆயிரம் எரி­பொருள் கொடுப்­ப­னவும் வழ­ங்­கப்­பட்­டது.


இதே போன்று விளை­யாட்­டுத்­து­றைக்கு பொறுப்­பாக இருந்த முன்­னைய அமைச்­சர்­களும் பல்­வேறு வகையில் அவ­ருக்கு பொறுப்­பு­களை வழங்கி அதற்­கான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் சம்­பளம் என்­பன வழங்­கப்­பட்­டது. மேலும் இரா­ணுவம் அவ­ருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபா வழங்­கு­கின்­றது. 


‘‘இந்­நி­லையில் அர­சாங்­கமோ அமைச்சோ தனக்கு ஒன்­றுமே செய்ய வில்லை என சுசந்­திகா ஜய­சிங்க கூறு­வதில் உண்­மை­யில்லை.


அதே போன்று அவ­ருக்கு வழங்­கப்­ப­டு­கின்ற சம்­ப­ளமும்  நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அதிலும் எவ்­வி­த­மான உண்­மையும் இல்லை.

தனக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொறுப்­பு­க­ளுக்­கான மாத அறிக்­கையை சமர்­பிக்க வேண்­டி­யது அமைச்சின் ஆலோகர் என்ற வகையில் அவ­ரது கட­மை­யாகும்.


‘‘அமைச்சின் ஆலோசகர் எனும்­போது அவர் அரச அதி­கா­ரி­யாக கரு­தப்­ப­டு­கின்றார். ஆனால் தனது கட­மை­களை செய்­யாமல் அமைச்சுக்கு எதி­ராக போலிப் பிர­சாரம் செய்­வதில் எவ்­வித நியா­யமும் இல்லை.


தம­யந்தி தர்ஷா மற்றும் சுகத் உள்­ளிட்ட பலர் பொது­ந­ல­வாய விளை­யாட்டு போட்­டி­க­ளிலும், ஆசிய போட்­டி­க­ளிலும் பதக்­கங்­களை வென்­றுள்­ளனர். இவர்கள் யாரும் தங்­க­ளுக்கு அர­சாங்கம் ஒன்றும் செய்ய வில்லை என பொது இடத்தில் கோஷம் எழுப்ப வில்லை. 


‘‘ஆனால் சுசந்­திகா ஜய­சிங்க இவ்­வாறு கூறு­கின்­றமை வேத­னை­யாக உள்­ளது. அர­சாங்கம் என்ற வகையில் அவ­ருக்கு செய்ய வேண்­டிய கட­மைகள் அனைத்­தையும் செய்­துள்­ளது.


அவரை சர்­வ­தேச போட்­டி­க­ளுக்கு தயார்ப்­ப­டுத்­து­வது முதல் இன்று வரை பல கோடி­களை செல­விட்­டுள்­ளது. எனவே எமக்கு எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம்பிக் பதக்­கத்தை ஏலம் விட்டால் விளை­யாட்­டுத்­துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும். அதில் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. 


ஆனால் இவ்­வா­றான செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­காக புதிய சட்­டத்தின் அவ­சியம் தற்­போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களின் பதக் கங்கள் நாட்டிற்கானதாகும் வகையில் அந்த சட்டம் அமையப்பெற வேண்டும். அதனூடாக பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments