Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (விரக்தியால் ஒரு வேண்டுதல்) நாங்கள் பிறை காண முன் அவன் சிறை காண வேண்டும் கவிதை தொகுப்பு.


Mohamed Nizous



நாங்கள்
பிறை காண முன்
அவன்
சிறை காண வேண்டும்



நாங்கள்
கஞ்சி குடிக்கும் போது
அவன்
அஞ்சி துடிக்க வேண்டும்



நாங்கள்
நோன்பு பிடிக்க முன்
அவன்
கம்பி பிடிக்க வேண்டும்



நாங்கள்
ஈச்சம் பழம் உண்ண முன்
அவன்
பேச்சுப் பலம் மறைய வேண்டும்



நாங்கள்
கேட்டு அழும் துஆவால்
அவன்
கூட்டுள் விழ வேண்டும்



நாங்கள்
நம்பி எண்ணும் திக்ரால்
அவன்
கம்பி எண்ண வேண்டும்



நாங்கள்
எழுந்து சஹர் செய்ய முன்
அவன்
ஒழிந்து  போக வேண்டும்



நாங்கள்
தானம் செய்யும் மாதத்தில்
இந்த
ஞானம் பொய்யனாக வேண்டும்



நாங்கள்
கேட்டு அழும் குனூத்தால்
அவன்
ஆட்டம் நிற்க வேண்டும்...!

Post a Comment

0 Comments