Subscribe Us

header ads

தொழிலுக்காக கத்தார் சென்று உரிமையாளரின் பணம், மற்றும் நகைகளை திருடிய இலங்கைப் பெண். நடந்தது என்ன?


தொழிலுக்காக கத்தார் சென்று உரிமையாளரின் பணம், மற்றும் நகைகளை திருடியதாக இலங்கைப் பெண் ஒருவர் அண்மையில் குற்றம் சாற்றப்பட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த டோஹா குற்றவியல் நீதி மன்றம் தகுந்த சாட்சிகள் இல்லாமையின் காரணமாக இலங்கைப் பணிப் பெண்ணை விடுதலை செய்துள்ளதாக கத்தார் டே இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தெரிய வருவதாவது குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கைப்பையிலிருந்து 4800 றியால்கள் பணம் மற்றும் உரிமையாளரின் மகளுக்குச் சொந்தமான இரண்டு உயர் ரக வாசனைத் திரவிய போத்தல்கள் போன்றவை வீட்டில் வைத்து சோதனை செய்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. என்றாலும் உரிமையாளர் போலிஸில் முறைப்பாடு எதனையும் செய்யவில்லை.


ஒரு நாள் குறித்த பெண் மேற்படி பணம் மற்றும் சில பொருட்களுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதன் பிற்பாடு தான் போலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் 6 நாட்களாகிலும் உரிமையாளர் வலுவான ஆதாரத்தை உரிமையாளர் கொண்டு வராதமையினால் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக டோஹா குற்றவியல் நீதி மன்றம் அறிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் - கத்தார்டே

தமிழில் உண்மையின் பக்கம்

Post a Comment

0 Comments