Subscribe Us

header ads

ஆரோக்கியத்துக்கு குறுக்கு வழிகள் கிடையாது டாக்டர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லாவின் நீரழிவு நோயாழிகளுக்கான அறிவுறை

என்னை சமீபத்தில் நீரிழிவு குறைபாடுடன் ஒருவர் சந்திக்க வந்திருந்தார் பத்து வருடங்களாக நீரிழிவு குறைபாடு இருப்பதாக கூறினார் இவர் சந்தித்த மருத்துவர்கள் அனைவரும் மாத்திரை போட்டால் இனி உங்களுக்கு நீரிழிவு குறையாது இன்சுலின் ஊசி போடுங்கள் என்று எடுத்துக்கூறியுள்ளனர்.

ஆனால் இவருக்கு இன்சுலின் போட விருப்பமில்லை.

சுலபமாக நீரிழிவை சரி செய்ய அவருக்கு ஒரு வழி தேவைப்பட்டிருக்கிறது.

தனது சொந்தக்கார சிகாமணியில் ஒருவர் அக்குபக்ஞர் மருத்துவம் பார்ப்பதாக அவரிடம் காட்டியிருக்கிறார்.

அவரோ இவரை எந்த மருந்தும் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட கடந்த மூன்று மாதங்களாக எந்த மாத்திரை மருந்துகள் எடுக்கவில்லை.

கூட வெல்லம் கருப்பட்டி சேர்த்த டீ குடித்துள்ளார்.

இப்போது என்னை சந்திக்கையில்  HbA1C - 16 ( பதினாறே தான்)  இருக்கிறது . (நான் பார்த்தவரையில் இது தான் அதிகம்) சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் 
Estimated GFR - 56 ml/min/1.73 m2 ( நீரிழிவினால் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை இருக்கிறது (diabetic nephropathy ) இவரது நெருங்கிய உறவினர் இவரிடம் பேலியோ தான் இதற்கு சிறந்த நிவாரணி என்று கூறிவிட என்னை சந்திக்க வந்திருக்கிறார்.

நான் இதை பகிர காரணம்ஒ ரு நீரிழிவு நோயாளி எதனால் தனக்கு இந்த நோய் வந்ததென்று அறியாமல் இருக்கிறார்..

மேலும் அந்த நோயை முற்றச்செய்யும் பல விசயங்களை தொடர்ந்து செய்கிறார்..

அதற்கான சரியான மருத்துவத்தை மருத்துவர்கள் எடுத்தியம்பியும் அதை காது கொடுத்து கேட்கவில்லை.

முதலில் டைப் டூ டயாபடிஸ் என்பது எதனால் வருகிறது என்று பார்ப்போம்

டைப் டூ என்பது நடுத்தர வயதில் உள்ளவர்களுக்கு அவர்களின் 30 வயதுக்கு பின் வரும் குறைபாடாகும்.

இதில் கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போகும் . இதை insulin resistance என்று அழைக்கிறோம்

இந்த நிலையிலேயே நீரிழிவை கட்டுக்குள் வைத்திருந்தால் பிரச்சனையில்லை  ஆனால் வாய் கட்டுப்பாடை கடைபிடிக்காமல் இருந்தால் நீரிழிவு முற்றும் முதலில் மெட்பார்மினில் ஆரம்பிக்கும் மாத்திரை பிறகு டயானில் அங்கிருந்து க்ளைசிநார்ம் பிறகு ஜெம்மர் என்று கூடி கடைசியில் இன்சுலினில் வந்து நிற்கும்.

ஏன் இப்படி ஆகிறது ???

நாம் தொடர்ந்து மாவுச்சத்துள்ள உணவுகளை உண்பதால் நமது ரத்தத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு கலந்து கொண்டே இருக்கும். இது பீட்டா செல்களை இரவு பகல் ஓய்வின்றி வேலை வாங்குவதற்கு ஒப்பாகும்.

இந்த அவஸ்தை தாங்காமல் சிறிது சிறிதாக பீட்டா செல்கள் தற்கொலை செய்து கொள்ளும்.

நீரிழிவை தடுக்க நாம் போடும் மாத்திரைகள் பீட்டா செல்களை கசக்கி பிழிந்து இன்சுலினை சுரக்கும் வைப்பவையாகும்.

இப்படி ஒரு நிலையில் கணையத்தில் ஒரு பீட்டா செல்கூட உயிரோடு இல்லாத நிலை உருவாகும் போது

இன்சுலினை வெளியில் இருந்து போடும் நிலை வருகிறது.

சரி.. நமக்கு வந்த நோய் இன்சுலின் வேலை செய்யாமல் போனதால் தானே வந்தது. அதை சரி செய்ய என்ன வழி???

இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்க நமது உடலுக்குள் தேவையற்ற மாவுச்சத்து செல்வதை குறைக்க வேண்டும்.

குறை மாவு நிறை கொழுப்பு உணவுகளை உண்ண வேண்டும்அ வ்வப்போது உண்ணாநிலையில் இருக்க வேண்டும்.இதை intermittent fasting . ( மருத்துவர் அறிவுரையின்றி கூடாது) இதன் மூலம் இன்சுலினை வேலை செய்ய வைக்கலாம்பீ ட்டா செல்களை பரிவோடு நடத்தி அவற்றுக்கு மறுவாழ்வு வழங்கலாம்இ துதான் சரியான வழி இந்த பதிவின் நோக்கம்நீ ரிழிவு என்பது எதிரியை விட மோசமானது
எதிரி கூட நம்மீது சில சூழ்நிலையில் இரக்கம் காட்டக்கூடும்நீ ரிழவு ஒரு சந்தர்பத்திலும் நம்மிடம் பாசம் காட்டாது ஆகவே அதைப்பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லது.

ஆரோக்கியத்துக்கு குறுக்கு வழிகள் கிடையாது நான் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன் நீ மாத்திரை மருந்தை குடு அதுதான் உன் வேலை என்றால் நாளைய அவதிக்கு யார் பொறுப்பு?? நீரிழிவு குறைபாடுஉங்களுக்கு தெரியாமல் வந்திருக்கலாம் ஆனால் அது உங்களை வெல்வது உங்களுக்கு தெரியாமல் நடக்கக்கூடாது இதை உணர்த்தவே இந்த பதிவு

#low carb high fat diet 
#insulin resistance

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர்

Post a Comment

0 Comments