ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று அங்குனுகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
மோசடிகளில் ஈடுபடுகின்ற அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்குவது மட்டுமல்லாது அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி பின் நிற்கமாட்டார் என மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.
0 Comments