தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் தலித் அருந்ததியர் மாணவி ஆதிக்கசாதி வெறிகொண்ட ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டு (அறுவைசிகிச்சை அளிக்கும் அளவிற்கு) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
ஆசிரியரிடம் நியாயம் கேட்ட மாணவியின் பெற்றோரிடம் 300 ருபாயை வீசிவிட்டு எங்காவது தனியார் ஹாஸ்பிட்டலில் பார்த்துக் கொள்ளுங்கள் என சாதித்திமிரோடு அந்த குழந்தையின் பெற்றோரை விரட்டியடித்திருக்கிறார்.
இப்படி செய்து விட்டோமே என்ற மன அழுத்தம் கொஞ்சம் கூட இல்லாமல், மனசாட்சியின்றி அந்த ஆசிரியை பேசியது மேலும் ஆத்திரத்தைதான் வரவைக்கிறது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனையளிக்கிறது.
தற்போது அந்த பரிதாபத்துக்குறிய பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாணவிபடும் துன்பத்தைக் கண்டு துவண்டு போய் இருக்கின்ற நிலையில், அங்கு வந்த ஆசிரியையின் கணவர் தனது செல்வாக்கின் மூலம் காவல் துறையை கைக்குள் வைத்துக் கொண்டு சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது எனவும், மீறி வெளியே தெரிந்தால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்று மிரட்டிச் சென்றிருக்கிறார்.
தகவலறிந்த ஆதித்தமிழர் பேரவை குழந்தைக்கும் அந்த பெற்றோருக்கும் பாதுகாப்பாக களத்தில் உள்ளார்கள் , அரசும் காவல்துறையும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபூஷேக் முஹம்மத்
0 Comments