Subscribe Us

header ads

சவுதி , இலங்கைக்கான துாதரக அதிகாரி பைசர் மகீன் சவுதியில் வபாத்


சவுதி , இலங்கைக்கான துாதரக அதிகாரி பைசர் மகீன் சவுதியில் வபாத் இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

கடந்த சனிக்கிழமை காலை ஜித்தா நகரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் உடல்நலக் குறைவினால் பைசர் மகீன் வயது 64 வபாத்தாகியுள்ளதாக Daily News இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மருத்துமனையில் வைக்கப்பட்டு இருந்த அவரின் ஜனாசா துாதரகத்திற்கு அருகில் இருக்கும் அல்-அமூதி பள்ளிவாசலில் தொழுகைக்காக வைக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக மக்கா பள்ளி வாசாலிற்கொ கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவரது ஜனாசாவில் இலங்கை துாதரக அதிகாரிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கைக்கான சுதந்திர தின நிகழ்வு துாதரக வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இவறிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அருவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. 




Post a Comment

0 Comments