கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை நாளைய தினம் வௌியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபில்யூ .எம்.என் . ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
சாதாரண தர , உயர்தரம் உள்ளிட்ட பிரதான பரீட்சைகளின் பெறுபேறுகளை குறிப்பிட்ட தினங்களில் வௌியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடந்த தினத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் , இவ்வாறு சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை வௌியாகவுள்ளன.
0 Comments