Subscribe Us

header ads

யாழ். அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

பாறுக் ஷிஹான்

அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க களுத்துறை இலங்கை பொலிஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவருடன் இணைந்ததாக  3 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இவ்வாறாக வேறு இடங்களுக்கு  இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பொலிஸ்  பரிசோதகர்  ஆக இருந்த   ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜயசிங்க  அச்சுவேலி  பொறுப்பதிகாரியாகக் கடமைக்கு அமர்த்தப்பட்ட பின்னர்  பொலிஸ்மா அதிபரினால் அண்மையில்   பிரதம பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

 இந்நிலையில் அச்சுவேலி பகுதியில்    நான்கு வருடகாலமாகப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய  இந்நிலையில் அவருக்கு   களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு இடம்மாற்றம்   வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments