Subscribe Us

header ads

வடகொரியா அமேரிக்காவுக் எச்சரிக்கை விடுத்துள்ளது ஏன்?

அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டால் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி வடகொரியாவின் எல்லைப் பகுதிக்கு மிகவும் நெருக்கமாக எதிரிநாட்டு போர் விமானங்கள் பறந்துள்ளன.
அத்துடன், வடகொரியா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவதற்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது எமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஒன்றாகவே கருதுகின்றோம்.
எனவே, இந்த பயிற்சி நடவடிக்கை தொடருமாக இருந்தால் தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக மிகவும் காடுரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments