Subscribe Us

header ads

பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் : ஷப்னா அறிவிப்பு....!!


ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சகோதரி ஷப்னா அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது...

எனக்கு உண்மையிலேயே இஸ்லாமிய சட்டம் தெரியாத காரணத்தினாலும், என்னுடைய அறியாமையின் காரணத்தினாலும் ஷரிஅத் சட்டத்தை தாம் தவறாக விமர்சித்து விட்டதாகவும், 

என்னுடைய மதத்தையோ, என்னுடைய சட்டத்தையோ புண்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை என்றும் தம்முடைய அறியாமையினால் கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார். 

மேலும் இஸ்லாம் வழங்கியுள்ள ஆண்களுக்கான சட்டம், பெண்களுக்கான சட்டம், விவாகரத்து சட்டம் ஆகியவைகளை இப்போது தாம் விளங்கி கொண்டதாகவும், இஸ்லாமிய பெண்ணாக தலைநிமிர்ந்து நீண்ட காலம் வாழ முடியும் என்றும், இஸ்லாமிய மார்க்கம் சுதந்திரத்தையும், முழு உரிமையையும் வழங்கியுள்ளது என்றும்,

தாம் அறியாமையில் சொன்ன வார்த்தைக்காக ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments