பெண்கள் காலணி சோடி ஒன்று நேற்றைய தினம் 310,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஊனமுற்றோர் சிறப்பு கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட காலணி சோடியே 310,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரணவிரு சேவா அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நாரஹென்பிட்ட சிறுவர் இல்லத்தில் ஊனமுற்றோர் சிறப்பு கல்வி பயிலும் மாணவரே காலாணிக்கான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஏலத்தின் மூலம் இந்த காலணி இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படை, முற்றபடை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தில் உள்ள ஊனமுற்றவர்களுக்காக இந்த மையம் நடத்தி செல்லப்படுவதோடு அங்கு காலணி தயாரிப்புகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
0 Comments