Subscribe Us

மஹிந்த அணியின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...


எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியின் பெயர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என மாற்றப்பட்டு, அதன் தலைவராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பெயரிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கட்சியின் செயலாளராக சட்டத்தரணி சாகர காரியவசம் செயற்பட்டு வந்துள்ளதுடன், கட்சியின் சின்னமாக மலர் மொட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற பெயரில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 18ஆம் திகதி அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. DC

Post a Comment

0 Comments