கல்லறையில் அடக்கம் செய்த பகுதிக்கு சென்ற அப்பெண்ணின் காதலன், கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தமிடுவதாக கூறியுள்ளார். இதனால் அவர் பெண்ணின் குடும்பதாரிடம் சென்று உங்கள் பெண் உயிரோடு இருப்பதாகவும், தொடர்ந்து சத்தமிடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மகள் உயிரோடு இருப்பதாக கருதி பெற்றோர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கல்லறையை உடைத்தனர். சவப்பெட்டியில் இருந்த பெண்ணை எடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார் என தெரிவித்தனர். மேலும் இது காதலனுடைய கற்பனை என்றும் மருத்துவர்கள் கூறினர்.
அதன் பின் அப்பெண்ணின் குடும்பத்தினர் மீண்டும் இறுதிசடங்கு செய்து உடலை அடக்கம் செய்தனர்.
0 Comments