நாளைய தினம் இடம்பெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்காக மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 701 பேர் தோற்றவுள்ளனர்.
இதில் 421 பேர் விஷேட தேவையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 959 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களை காலதாமதமின்றி பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து வருமாறும் பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரை கோரியுள்ளது.
இதேவேளை, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முறைப்பாடுகள் வழங்க வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களம் அவசரத் தொலைத் தொடர்பு சேவை 1911 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
24 மணித்தியாலங்களும் தொடர்பை ஏற்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை திணைக்களத்தின் பின்வரும் கைபேசி இலக்கத்துடன் 0112 784 208, 0112 784 537, 0113 188 350 தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவிப்பு
விடுத்துள்ளது.
0 Comments