தென்ஆப்பிரிக்காவில் வடக்கு கேப் பகுதியைச் சேர்ந்தவர் செகோமோட்சோ கேர்சேவ்.
இவர் தனது 6 வயது மகன் குட்ல்வானோ கேர்சேப், அவனது அண்ணன் தபிசோ, ஆகியோரை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு மர்ம நபர் திடீரென குறுக்கி அவரிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர் மறுக்கவே, ஆத்திரமும், கோபமும் அடைந்த அவன் செகோமோட்சோவை தாக்கியுள்ளார்.
அதைப் பார்த்த மகன்கள் குட் லவானோ மற்றும் தபிசோ ஆகியோர் காப்பாற்ற முயன்றனர்.
இதற்கிடையே, அந்த மர்ம நபர் செகோமோட் சோவை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
அவனிடம் இருந்து தப்ப செகோமோட்சோ போராடினார்.
இதைப் பார்த்த 6 வயது குட்லவானோ கேர்சேப் அருகில் கிடந்த கண்ணாடி போத்தல் ஒன்றை எடுத்து உடைத்து, தாயை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை சரமாரியாக குத்திகொலை செய்துள்ளார்.
இதுகுறித்து காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
0 Comments