சுயநல அரசியலுக்காக முஸ்லிம் தேசியம் என்ற கோசம் எழுப்பி முஸ்லிம் சமூகத்தை மரணக்குழிக்குள் தள்ள முன்னாள் அமைச்சர் சேகுஇஸ்ஸடீன் அவர்கள் முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அஹமட் புர்கான்.
இனங்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை கைவிட்டு இனவாத அடிப்படையில் முஸ்லிம் தேசியம் என்ற கோசத்தின் மூலமாக தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள சமூகத்தை காட்டிக்கொடுப்பதை இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த பல தசாப்தங்களாக தமிழர் தரப்பினர் தமிழ்த்தேசியம்,தனிநாடு, தமிழ் ஈழம் என்ற கோசத்தின் மூலமாக தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக்கொண்டார்கள். அதன் விளைவு என்னவென்பதை நாங்கள் கண்ணூடாக கண்டு இருக்கிறோம். அந்த அனுபவம் எங்களுக்கு போதுமானதாகும். எனவே அவர்கள் செய்த அதே தவறை நாங்களும் செய்து எங்களை நாங்களே அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வழியைத் தேடுவது மிகப்பெரிய முட்டாள்த்தனமான செயற்பாடுகளில் ஒன்றாகும்.
இன்று இந்த நாட்டில் பௌத்த அடிப்படைவாதிகள் வெறுமனே எமக்கெதிராக ஊலையிட்டு திரிகின்றார்கள். மேலும், அவர்களின் வாய்களுக்கு அவலும், சீனியும் அள்ளிப்போட்டு சமூகம் அழிவதை வேடிக்கை பார்க்க நினைப்பது தவறாகும்.என நான் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸடீன் அவர்களிடம் கூறிவைக்க விரும்புகிறேன்.
வடகிழக்கு இணைவதற்கு முன்னர் எந்த விதமான அடிப்படை நோக்கமும் இல்லாமல் பதவிகளுக்காக சமூகத்தின் அழிவை சாதகமாக பயன் படுத்தி இனவாதத்தை மாத்திரம் மூலதனமாக கொண்டு அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை நீங்களும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் ஆரம்பித்து தேசிய கட்சிகளுடன் இணைந்திருந்த முஸ்லிகளுக்கு இனவாத சாயம் பூசி ஏனைய சமூகங்களுடன் இருந்த ஒற்றுமையை சீர் குளைத்ததை தவிர முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் பெற்றுக்கொடுத்த நன்மை என்ன வென்று கேட்க விரும்புகிறேன்?
அன்று தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்காக முஸ்லிம்கள் தரப்பாக சென்ற முன்னாள் அமைச்சர் மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் இந்தியாவிற்கு வடக்கு கிழக்கு விடயத்தில் எதைப் பேசினார் என்பதை கூட புரியாமல் அவர் வடகிழக்கை இணைக்க ஒப்புதல் வழங்கினார். என பொய்யான கற்பனை கதைகளை கிழக்கு முஸ்லிம் மத்தியில் பரப்பி நாங்கள் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள் என்று கூறினீர்கள். ஆனால் பிற்காலகட்டத்தில் அதேவடகிழக்கு இணைப்பு விடயத்தில் நீங்கள் இணங்கிய அரசியல் செய்தது மாபெரும் வரலாற்று தவறாகும்.
அன்று முஸ்லிம் தரப்பாக அதன் தலைவராக சென்ற மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தரக்குறைவாக விமர்சித்தது மாத்திரமின்றி கல்முனையில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இந்தியா சென்ற மர்ஹூம் பதியுதீன் மஹ்மூத் அவர்களை ஓநாய் என்று சாடிப் பேசியதையும், நீங்களும் உங்கள் கட்சியும் மாத்திரம்தான் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள் என உங்கள் எதிர்ப்பை அன்று வெளிப்படையாக காட்டியதையும் மறப்பதற்கு இல்லை.
இது ஒருபுறமிருக்க அன்று வடகிழக்கு மாகாணங்ளை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் அவர்கள் இணைத்ததை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்தது. மட்டுமல்லாது ஸ்ரீமாவோ பண்டார நயக்க தலைமையிலான சுதந்திர கட்சியும், ஜே.வி.பியும் எதிர்த்திருந்தது.
அதன்போது மிகவும் பகிரங்கமாக வடக்கு கிழக்கு இணைப்பை கிழக்கில் பிறந்த ஒருவரான மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் கட்சியும் நீங்களும் எதிர்த்துவந்தது மாத்திரம் இன்றி 1988, 89 களில் வடகிழக்கு மாகாண சபை தேர்தலை நீங்கள் நிராகரிப்பதாகவும் மேடைக்கு மேடை பிரச்சாரம் செய்தீர்கள்.
அவ்வாறு இருக்க, பின்னர் திடீரென்று மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததற்கான மர்மம் என்ன?
அன்றுவரை வடகிழக்கு மாகாணங்கள் இணைவதை எதிர்த்தவர் இரவோடு இரவாக கொழும்பில் டம்மி வேட்பாளர்கள் பெயர்பட்டியலை தயார் செய்து கல்முனைக்கு ஹெலியில் வந்திரங்கி இணைந்த வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் மு.கா போட்டியிட வேண்டும் என்ற அறிவிப்பை வழங்கியதற்கான காரணம் என்ன?
முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஐயா அவர்களை அண்மையில் நீங்கள் சந்தித்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்று வடகிழக்கு மகாணசபைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டிருந்தால் தற்காலிகமாக கூட வடக்கு கிழக்கும் இணைந்திருக்காது என்று கூறியதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். அதற்கு தமிழர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதற்காகத்தான் அந்த உதவியை செய்தோம் என்றும் பதில் வழங்கியிருந்தீர்கள். இந்த பதில் உண்மையில் நியாய பூர்வமானதா? உங்கள் தவறை மறைப்பதற்காக அன்று வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு கிழக்கு முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய வரலாற்று துரோகத்தை செய்ததை மறைக்க முயற்சிப்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
அன்று அத்தேர்தலில் களம் கண்டு 17 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக மாகாண சபைக்கு செல்லாமல் ஏன் மொத்தத்தில் தேர்தலில் போட்டியிடாமல் விட்டிருந்தால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்பட்டிருக்காது என்று ஐயா வரதராஜபெருமாள் கூறுகிறார். என்றால்
மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் நீங்களும் கட்சியும் தெரிந்து கொண்டே, ஆரம்பத்தில் இருந்தே சோரம் போய்விட்டீர்களா?
எனவே இவைகளை நீங்கள் மரணிப்பதற்குள் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதைவிடுத்து மீண்டும் சமூகத்தை பழிக்கடாவாக்க நினைப்பதை நிறுத்தி விட்டு சமூகத்தின் மீது விசுவாசமாக இருக்குமாறும் இளைய சமூதாயத்தினரை இனவாதங்களுக்கு அப்பால் தேசிய ரீதியான அரசியல் கொள்கையை கற்றுக் கொடுக்குமாறும் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
0 Comments