“எனது மகிந்த சிந்தனை திட்டத்தின் படி அரசாங்கம் வெளிநாட்டவர்களின் உதவியுடன் தற்போது பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று தெரிவித்துள்ளார்.
பிலியந்தளையில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரம், மத்தள விமான நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில் தன்னுடைய அரசாங்கமே திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் இதே திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தன்னுடைய “மகிந்த சிந்தனையை” உலகம் முழுதும் விற்பனைசெய்து வருகின்றது என மகிந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
0 Comments