தற்போதைய அரசாங்கம் தமக்கு தேவையான விதத்தில் சட்டத்தை கையாளுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவரது மகன், நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்கு நேற்று மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்ற போது, நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


0 Comments