Subscribe Us

header ads

பேய்களுக்கு அஞ்சியிருந்தால் மயானத்தில் வீடு அமைக்க மாட்டோம்! எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பிரசன்ன ரணதுங்க

பேய்களுக்கு அஞ்சியிருந்தால் மயானத்தில் வீடு அமைக்க மாட்டோம் என கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இரகசியங்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உடுகம்பொல பகுதியில் நடபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். ஏன் இவ்வளவு காலம் இரகசியங்களை பேணிப் பாதுகாத்தார்.
களவு எடுத்தல், களவாடப்பட்ட பொருட்களை வைத்திருத்தல் மட்டுமன்றி களவுகளை மூடி மறைத்தலும் குற்றச் செயலாகும்.
இரகசியங்களை மூடி மறைத்தல் குற்றச் செயலாகும். பேய்களுக்கு அஞ்சி மயானத்தில் வீடு அமைக்க முடியாது.
புதிய சக்தியொன்று உருவாக்கப்படுவதற்கு பலர் அஞ்சுகின்றனர். இதனால் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
இரகசியங்களை மூடிமறைத்துக் கொண்டிருப்பது நல்லாட்சியாக அமையாது. ஏன் இவ்வளவு காலம் இரகசியங்கள் மூடி மறைக்கப்பட்டன.
நல்லாட்சி அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டு இன்று-நாளை எம்முடன் இணைந்து கொள்ள இருப்பவர்களை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கருத்து வெளியிடுகின்றார்.
இவ்வாறான அச்சுறுத்தல்களைக் காண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை, எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் நான் பங்கேற்க மாட்டேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments