Subscribe Us

header ads

புத்தளம் தில்லையடி முஸ்லிம் பாடசாலையில் 3 மாத இலவச மேலதிக கணிதப் பாட வகுப்புக்கள் ஆரம்பம் - படங்கள்

"சாரா கல்வி மன்றம்" ஏற்பாட்டில் தில்லையடி முஸ்லிம் பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த.சா/த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 3 மாத இலவச மேலதிக கணிதப் பாட வகுப்புக்கள் அதிபர் எஸ். எஸ். எம். ஹுதைலீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதில் சாரா கல்வி மன்ற செயலாளர் அஷ்ஷேய்க் அப்துல் மலிக், கல்விக் குழுத் தலைவர் ஹமீத், பொருளாளர் ஏ.ஆர்.ஜன்ஸூல், உறுப்பினர் பைறூஸ், வளவாளர் சித்தீக்கான், ஆசிரியர் தமீம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இம்மன்றத்தின் தலைவராக சுல்தான் அப்துல் காதர்( ஜன்ஸீர்) செயற்பட்டு வருகிறார்.

-Mohamed Muhsi-







Post a Comment

0 Comments