Subscribe Us

header ads

நான் அரச வங்கி அதிகாரி - மக்களே அவதானம்!

அரச வங்கி அதிகாரியாக தன்னை காட்டிக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலனேவ-கும்புக்வேவ பிரதேசத்தில் உள்ள பெண்ணொருவரிடம் குறித்த நபர் பண மோசடி செய்துள்ளதாகவும், குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்த நபரை கைது செய்துள்ளதாகவும் கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சந்தேகநபரிடம் இருந்த போலி ஆவணங்களையும்,மோட்டார் சைக்கிள்ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபரை இன்றைய தினம் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments