68 : ரோம மன்னன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். இதன் மூலம் ஜூலியோ குளோடிய பரம்பரை ஆட்சி முடிவடைந்தது.
1873 : 16 தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.
1885 : சீனா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தியன்ட்சின் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் தற்போதைய வியட்நாமின் பெரும்பகுதியை பிரான்ஸுக்கு வழங்க வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டது.
1923 : பல்கேரியாவில் புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 : அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான பசுபிக் சமுத்திரப் பகுதியை சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் முதற்தடவையாக விமானத்தில் கடந்தார்.
1934 : வோல்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் கார்ட்டூன் கதை வெளிவந்தது.
1944 : பிரான்ஸில் 99 பொதுமக்களை ஜேர்மனியப் படைகள் தூக்கிலிட்டுக் கொன்றன.
1944 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.
1946 : தாய்லாந்தில் மன்னர் ஆனந்த மஹிதோல் தனது படுக்கையறையில் மர்மமான துப்பாக்கிச் சூட்டினால் இறந்தார். பின்னர் அதுல்யாதே தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார். இவரே தற்போது உலகில் மிக நீண்டகாலமாக ஆட்சியிலுள்ள மன்னர் ஆவார்.
1948 : சர்வதேச சுவடிகள் பேரவை யுனெஸ்கோ அமைப்பின் ஆதரவுடன் ஸ்தாபிக்கப்பட்டது.
1965 : தென் வியட்நாமின் பிரதமர் பான் ஹுய் குவாத் ராஜினாமா செய்தார்.
1967 : 6 நாள் யுத்தத்தின்போது கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.
1972 : அமெரிக்காவின் தென்டகோட்டா மாநிலத்தில் கடும் மழையினால் அணைக்கட்டு ஒன்று உடைந்ததால் 238 பேர் உயிரிழந்தனர்.
1974 : சோவியத் யூனியன், போர்த்துக்கல் நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.
2009 : பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 17 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்.
2010 : ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 40 பேர் உயிரிழந்தனர்.

0 Comments