நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தங்களால் முடியுமான உதவிகளை இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றமை அனைவும் அறிந்த விடயம்.
இந்நிலையில், தனிப்பட்ட நபர்கள் சரியான ஒரு ஏற்பாடு இல்லாமல் உதவிகள் முக்கியமாக சமையத்த உணவுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிப்பதால், தற்பொழுது அவை பழுதடைந்து குப்பைகளில் வீசப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
ஆகவே பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை முன்னேடுக்கம் குழுக்களை தொடர்புகொண்டு, என்ன தேவை என்பதை கேட்றிந்து, தங்களில் உதவிகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விதித்துள்ளனர்.
அதேவேளை சமைத்த உணவுகளை விநியோகிப்பவர்கள் விரைவில் கெட்டுப்போகாத உணவுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறும் வேண்டுகள் விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments