மத்திய பிரதேசத்தில் கணவன் தூங்கி கொண்டிருக்கும் போது அவரது கண்ணீல் ஃபெவிகுவிக்கை ஊற்றியுள்ளார் மனைவி.
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் சந்தோஷ் விஷ்வகர்மா, இவரது மனைவி பெயர் விஜய லட்சுமி. சந்தோஷ்க்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு மனைவியை துன்புறுத்தி வந்தார். குடிபழகத்தை கைவிட்டு விடுமாறு விஜயலட்சுமி கெஞ்சி கேட்டுள்ளார். மனைவி வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதனால் தினமும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையை வெறுத்த விஜயலட்சுமி தனது கணவனுக்கு பாடம் புகட்ட எண்ணினார்.
இந்நிலையில் கடந்த 18-தேதி நள்ளிரவு சந்தோஷ் குடிபோதையில் விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியுடன் சண்டை போட்டு விட்டு தூங்கிகொண்டிருந்தார். அவர் தூங்கி கொண்டிருக்கும் போது அவரது மனைவி விஜயலட்சுமி கணவரின் கண்ணில் ஃபெவிகுவிக்கை ஊற்றிவிட்டார்.
மறுநாள் காலையில் எழுந்த சந்தோஷ் கண்ணை திறக்க முயற்சித்தார். அப்போது அவரால் கண்ணை திறக்க முடியவில்லை. கண்ணில் தண்ணீரை தெளித்து பார்த்தார் அவரால் கண்ணை திறக்க முயலவில்லை. இது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார்.இது குறித்து விளக்கத்தை கணவனிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் அருகில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இது குடும்ப பிரச்சனை நீங்கள் தலையிட வேண்டாம் என்று அக்கம் பகத்தில் வசிப்பர்களிடம் விஜயலட்சுமி எச்சரித்து சென்று விட்டார்.
தற்போது சந்தோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments